அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏன் Donald Trump வெற்றி பெற்றார் என்று உற்று நோக்கினால் ஒரு உண்மை புரியும்.
ஹிலாரி கிளின்டன் போல, டொனால்ட் டிரம்ப் அறிவாளி கிடையாது. பேச்சாற்றலும் கிடையாது. ஆனால் மக்களின் நாடி துடிப்பை அறிந்து வைத்து இருந்தார். உள்ளூரில் பலர் வேலை இன்றி இருக்கின்றார்கள். அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டவர்களுக்கு வேலைகளை வாரி வழங்கினார். உள்ளூரில் பல தேவை இல்லாத சம்பவங்கள் நடக்க தொடங்கின. இதை நன்கு அறிந்த டொனால்ட் டிரம்ப், வேளைகளில் முதல் உரிமையை அமெரிக்கர்களுக்கு வழங்க வேண்டும் என்று முழங்கினார். அமெரிக்காகர்களுக்கு போக தான் மற்றவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று முழங்கினார். தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
இதே தான் தமிழ் நாட்டில் உள்ள வேலை தமிழர்களுக்கே என்ற முழக்கம்.
நம்ம ஊரில் படித்து வேலை இல்லாத இளைஞர்கள் பலர் உள்ளனர். தீவிரமாக அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பல இளைஞர்கள் இங்கு இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு வேறு மாநிலத்தவர்களுக்கு அந்த வேலைகளை வழங்குவது என்ன நியாயம்? முதலில் தமிழ் நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைகளை கொடுப்போம். பின்பு மற்ற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கலாம். இதில் எந்த தவறும் இல்லை. தனக்கு போக தான் மற்றவர்களுக்கு என்பதில் என்ன தவறு ?
அதுமட்டும் இல்லாமல், வெளி மாநிலத்தவர்களுக்கும் இது சிக்கலான ஒன்று தான். தமிழ் பேசும் மக்கள் கொண்ட தமிழ் நாட்டில், பொதுத்துறை வங்கியில் வேற்று மாநிலத்தவர் ஒருவர் வேலை செய்தால் எவ்வாறு சமாளிக்க முடியும்?. அவருக்கு எப்படி தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் உணர்வுகள் புரியும்?
குறிப்பு: இந்தியாவில் அதிகமாக போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழகம் தான். இதற்கு முக்கிய காரணம் படித்து முடித்து வேலை இன்றி இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். இதே நிலை தொடர்ந்தால், தமிழ் நாட்டில் பல் வேறு பிரச்சனைகள் வரும். எனவே அரசு தக்க நடவடிக்கை எடுத்து தமிழக இளைஞர்களை நல்ல வழியில் நடத்த வேண்டும். இல்லை என்றால் நம் நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாகும்.
தேவை இல்லாத வேலையை மத்திய அரசு செய்கிறது. அதற்கு உடந்தையாக தமிழ் நாட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு உதவி செய்து தமிழக இளைஞர்களை வஞ்சிக்கின்றது.
#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils
0 comments:
Post a Comment