தமிழ் நாட்டை ரஜினி ஏன் ஆள வேண்டும் ?
தமிழ் நாட்டில் மொத்தம் மாவட்டங்களின் எண்ணிக்கை 37. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல தாலுக்காகள் மற்றும் நகரங்கள் உண்டு. ஒவ்வொரு தாலூக்காவிற்கும் பல கிராமங்கள் உண்டு. மாநகரம் நகரம் பேரூராட்சி ஊராட்சி என்று பறந்து விருந்து இருக்கும் சாம்ராஜ்யம் தமிழ் நாடு. இதை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்?
தமிழ் நாட்டில் இருக்கும் கட்டமைப்பு, ஜாதிகள், மதங்கள்,பொருளாதாரம்,இயற்கை முறை, உள்ளாட்சி அமைப்புகள், துறைகள் பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்?
கடந்த 20வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் சினிமாவில் நடித்து செந்நனையை விட்டு தமிழ் நாட்டில் எங்கும் செல்லாத ரஜினி க்கு தமிழ் நாட்டை பற்றி என்ன தெரியும். அவருக்கு தமிழ் நாடி எத்தனை இன மக்கள் வாழுகிறார்கள். எத்தனை மொழி பேசும் மக்கள் வாழ்கின்றார்கள். எத்தனை உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளார்கள். எத்துணை துறைகள் உள்ளது. அந்த அந்த துரையின் செயல்பாடுகள் என்ன என்று ரஜினிக்கு என்ன தெரியும்?
சரி தமிழ் நாட்டை ரஜினியின் கையில் கொடுத்து விடுவோம். முதலமைச்சராக பதவி ஏற்கும் பொது தெளிவான தமிழில் பதவி பிரமாணம் எடுக்க வேண்டும். ரஜினி தெளிவான தமிழில் பதவி பிரமாணம் எடுக்க முடியுமா?
தமிழ் நாட்டில் பிறக்கவும் இல்லை. தாய் மொழி தமிழும் கிடையாது. தமிழ் நாட்டில் சென்னையை தாண்டி எங்கும் சென்றது கிடையாது. ஆனால் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று எப்படி ஒருவர் நினைக்க முடியும். இந்த மாதிரி வேறு எந்த மாநிலத்தில் பேச, நினைக்க கூட முடியாது. ஓட ஓட துரத்தி இருப்பார்கள். அது தான் உண்மை.
ரஜினி கையில் தமிழ் நாடு செல்லுவது எடப்பாடி கையில் தமிழ் நாடு இருப்பதை விட மிக மோசமான ஒன்று. ரஜினி வந்து விடுவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என் என்றால், அரசியலுக்கு வரும் போது Social media இல்லை. ரஜினி அரசியலுக்கு வருகின்ற பொழுது Social media உச்சத்தில் உள்ளது. கண்டவர்கள் பேச்சை கேட்டு மரியாதையை கெடுத்துக்கொள்ளாமல் தமிழ் நாட்டில் என்று அவர் சூப்பர் ஸ்டாராக வாழ வேண்டும் என்பது என் விருப்பம். இல்லை என்றால்,
வாங்க ரஜினி. தமிழ் நாட்டு அரசியலில் விஜயகாந்த் விற்று சென்ற இடத்தை நிரப்புங்கள.
சும்மா வந்தா கூட எதாவது தேறும், பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்தால் என்ன ஆகும் என்பதை ரஜினி அதிமுக பாமகவை பார்த்த தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: இப்படிக்கு குழந்தையில் இருந்து ரஜினி ரசிகன்
சுருக்கமான பதில்: வாய்ப்பே இல்லை
0 comments:
Post a Comment