praveenkumar558@gmail.com
Follow on
Tuesday, May 26, 2020

Foodie Seeman

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சமீபத்திய பேட்டி ஒன்றை கண்டேன், அதில் அவர் புலிகளின் விருந்தோம்பல் பற்றி ஒன்றை கூறி இருந்தார். ஈழத்திற்கு அவர் சென்ற பொழுது, அவருக்கு வழங்கிய இட்லியை உடைத்தால் உள்ளே கறி இருந்தாக கூறி இருந்தார். 

மிக வருத்தமாக இருந்தது. பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஈழத்தில் புரோட்டா கடை நடத்தில் வந்தது போல சீமான் அவர்களின் பேச்சுக்கள் இருக்கின்றது. திரும்ப திரும்ப சீமான் அவர்கள் தனக்கு கிடைத்த விரும்தோம்பலை பற்றி கூறி புலிகளின் வீரத்தை கம்பீரத்தை குறைத்து கொள்கின்றார் என்று தோன்றுகின்றது. மாவீரன் என்றும், அகில உலகம் நடுங்கும் படைகளின் தலைவன் என்று அறியப்பட்ட கூறப்பட்ட பிரபாகரன் அவர்கள் மற்றும் அவரின் விடுதலை புலிகளை, சீமான் அவர்கள் முனியாண்டி விலாஸ் நடத்தியவர்கள் போல சித்தரிக்கிறார். விடுதலை புலிகளை பற்றி கூற ஆயிரம் விடயங்கள் உள்ளது. அவற்றை எல்லாம் பற்றி கூறாமல், சீமான் அவர்கள் திரும்ப திரும்ப தான் தின்னதை பற்றியே கூறுகின்றார். அவர் எதற்காக ஈழத்திற்கு சென்றார். இப்படி அறுசுவை உணவை நல்லா திங்கவா சென்றார்.?

முதலில் அவர் ஈழத்திற்கு சென்றாரா. எப்போது சென்றார் என்ற கேள்வி தான் கேட்க தோன்றுகின்றது. ஏன் என்றால், அவர் இது வரைக்கும் கூறிய எந்த ஒரு கதைகளுக்கும் உரிய புகை படமோ இல்ல காணொளியொ எதுவும் வெளியிட வில்லை. இது வரைக்கும் சீமான் அவர்கள் வெளியிட்டது ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தான். பிரபகாரன் அவர்களுடன் இருப்பது போல ஒரே ஒரு படம் மட்டும் தான் வெளியில் உலாவி கொண்டு இருக்கின்றது. அது உண்மையான படமா என்ற சந்தேகமும் உள்ளது. சீமான் அவர்கள் விரைவில், அவர் உண்ட உணவின் புகைப்படமோ இல்லை ஈழத்திக்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படம் அல்லது காணொளியை வெளிய விட வேண்டும். இல்லை என்றால் இது போன்ற கதைகளை நிறுத்தி கொள்ள வேண்டும். 

எனக்கு வருத்தம் எல்லாம் ஒண்ணே ஒன்னு தான். இவர் கூறும் இந்த கதைகளை உண்மை என்று நினைத்து அவர் பின்னால் நிற்கும் தம்பிகள் கூட்டம் தான். கொஞ்சம் கூட உண்மை இல்லாத ஒரு நபரின் பின்னால் இளைஞர்கள் இருப்பது வருத்தம். இந்த இளைஞர்களின் பெற்றோர்கள் மிக கவனமா இருக்க வேண்டும். சீமான் அவர்களின் மேடை பேச்சை கேட்டு தவறான வழிகளில் தங்கள் பிள்ளைகள் செல்லாமல் பார்த்துக்கொள்ளுவது பெற்றோர்களின் பொறுப்பு.



ஏன்  என்றால் சீமான் போன்றவர்கள், மேடைகளில் இளைஞர்களை தாங்கள் செய்யும் வேலையை விட்டு விட்டு மாடு மேய்க்க கூறுகின்றார். மாடு மேய்ப்பது ஒன்று தவறான தொழிலோ, இல்லை அசிங்கமோ கிடையாது. ஆனால், நன்கு படித்த இளைஞர்ளை மாடு மேய்க்க சொல்லிட்ட்டு இவர் சொகுசாக காரில் ஏறி செல்கின்றார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். Vaccination க்கு எதிராக பல மேடைகளில் பேசிவிட்டு தன் பிள்ளைக்கு Vaccination செய்து இருக்கின்றார் சீமான். தனக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று இருக்கும் சீமான் போன்றவர்கள் பின்னால் இளைஞர்கள் இருப்பது மிக வருத்தம்.

அது மட்டும் கிடையாது. மேடைக்கு மேடை Corporate களுக்கு எதிராக பேசும் சீமான் பயன்படுத்தும் காரில் இருந்து கை பேசிவரைக்கும் Corporate தயாரிக்கும் பொருள் தான். அவர் கூறும் தற்சார்பு பொருளாதார கொள்கை போன்றவைகள் மேடைகளில் பேசுவதற்கு நன்றாக தான் இருக்கும். கேட்க்கும் போது நன்றாக தான் இருக்கும். அவர் மேடையில் பேசியதை நடை முறை படுத்த ஒரு தம்பி முயன்றார். வாங்கி கட்டிக்கொண்டார். 

உணர்ச்சி பொங்க பேசி உங்கள் வீட்டு பிள்ளைகளை சீமான் போன்ற "Emotion Triggering Leader"களிடம் காவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

குறிப்பு: அண்ணன் சீமான் அவர்கள் கூறிய விதவிதமான உணவுகளை தாமு அவர்கள் கூட செய்து இருக்க மாட்டார் என்று தோன்றுகின்றது. தம்பிகளே இட்லி கறி என்பது இலைங்கையில் உண்டு. ஈழம் இன்றும் உள்ளது. புலிகள் இருந்தார்கள். சீமான் அவர்கள் ஈசத்திற்கு சென்றாரா அங்கு கறி இட்லி தின்றாரா என்பது தான் கேள்வி. அது உண்மை என்றால் அண்ணனை ஒரு வீடியோ போட சொல்லுங்க. அது போதும்.

நன்றி !

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Foodie Seeman Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran