கமல் ஹாசன் அவர்கள் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களின் கதைகளை கூற வேண்டும். ஒரு சில கதைகள் பெரிதாக ஒரு தாக்கமும் இருக்காது. ஒரு சில கதைகள் பசுமரத்து ஆணி போல நெஞ்சில் பதிந்து விடும். ஆதில் ஒன்று தான் பிக் பாஸ் 5யில் திரு நங்கை நமிதா அவர்கள் கூறிய கதை. அவர் கூறிய கதையில் ஒரு உண்மை இருந்தது. அவர் கூறிய கதையில் ஒரு வழி இருந்தது. எல்லாத்துக்கும் மேலாக, அவர் கூறியது கதை அல்ல, நிஜம். இந்த உலகம் முழுவதும் கதைகள் நிறைந்த ஒன்று தான். அந்த காலத்தில் ராஜா கதை, இந்த காலத்தில் சாமணியர்களின் கதை.
மதுரையில் இல்லாத ஒன்று சென்னையில் உள்ளது என்றால், அது கதை சொல்லும் திருவிழாக்கள் தான். சென்னை முழுவதும் இது நடைபெறும். இதுக்கு பெரிய பெரிய ஏற்பாடுகள் எல்லாம் தேவை இல்லை. ஒரு 10×10 ரூம், கதை சொல்லி, கதை கேட்பவர், ஒருங்கிணைப்பாளர் இருந்தால் போதும், ஒரு கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்தி விடலாம்.
கதை சொல்லும் நிகழ்ச்சிகள் ஒரு அற்புதமான களம் என்று கூறலாம். பல்வேறு வாழ்க்கை சூழ்நிலையில் இருந்து வருபவர்கள், பல்வேறு துறையில் வேலை செய்பவர்கள், அவர்களின் அனுபவ கதைகளை வந்து கூறுவார்கள். நாமும் நம் கதைகளை மற்றவர்களுக்கு கூற ஒரு அறிய வாய்ப்பாக இருக்கும். பொதுவாக IT துறையில் வேலை செய்கின்றவர்கள் கற்று கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான திறமை எது என்றால், கதை சொல்லும் திறமை தான் (story telling skill). இதை வளர்த்து கொண்டால், பல்வேறு கலந்துரையாடல்கள் மிக எளிமையாக அருமையாக கடந்து செல்லலாம்.
சென்னையில் இருக்கும் போது, நானும் பல்வேறு கதை சொல்லும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று என் கதைகளை கூறி உள்ளேன். பல்வேறு விதமான கதைகளை கேட்டுள்ளேன். அதில் எனக்கு மிக நெருக்கமான ஒன்று, சத்யம் திரையரங்கு அலுவலகத்தில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி தான்.அப்போது க்ளிக் செய்த புகைப்படம் தான் இது.
இந்த கோரோணா காலத்திற்கு பிறகு, இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சுருங்கி விட்டது வருத்தமான ஒன்று தான். மீண்டும் இது போன்ற நிகழ்ச்சிகள் விரைவில் அதே பழைய வேகத்துடன் நடக்க வேண்டும் என்பது என் ஆசை.
இது போன்ற நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால், கீழ் இருக்கும் முக நூல் பக்கத்தை தொடருங்கள்.
https://www.facebook.com/thenarrative.in/
நன்றி!
0 comments:
Post a Comment