praveenkumar558@gmail.com
Follow on
Thursday, May 28, 2020

ஏன் அதிமுக அரசை மக்கள் 2021ல் தோற்கடிக்க வேண்டும்? - 1

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் நாடு சட்ட மன்றத்தில் அணைத்து கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது மத்திய அரசு. மத்திய அரசு அந்த தீர்மானத்துக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் கெட்டப்பில் போட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த தீர்மானம் எங்கு சென்றது என்று தெரியவில்லை என்றார். தமிழ் நாட்டில் இருக்கும் அமைச்சர்களோ மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக கூறி வந்தார்கள். 

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், நீட் தேர்வு தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றது. நீட் தேர்வில் தோல்வியை தழுவி மாணவி அனிதா தங்கள் உயிரை எடுத்துக்க கொண்டனர். தமிழ் நாடு மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையங்கள் போடப்பட்டது. என்று தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசும், அதற்கு உடந்தையாக இந்த மாநில அரசும் செயல் பட்டது. அழுத்தம் கொடுக்கின்றோம் அழுத்தம் கொடுக்கின்றோம் என்று மட்டும் மறக்காமல் கூறிவந்தார்கள். எந்த மாதிரியான அழுத்தம் என்று பின்பு தான் விளங்கியது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பின்பு தான் தெரியவந்தது, தமிழ் நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அந்த சட்டத்தை  மத்திய அரசு பல நாட்களுக்கு முன்னாலே நிராகரித்து விட்டது என்று. பல நாட்களுக்கு முன்னாள் நிராகரித்த அந்த சட்டத்தை பற்றி எதுவுமே வெளியே சொல்லாமல், மக்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றோம் அழுத்தம் கொடுக்கின்றோம் என்று சொல்லி நம் மாணவர்களின் எதிர்காலத்தை இவர்கள் அடகு வைத்தது தான் மிச்சம். 



துளி அளவு கூட உண்மையும், தீர்மானத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு அழுத்தம் தவிர வேறு எதுவும் கொடுக்காத இந்த அரசு நமக்கு தேவைதானா?மாணவர்களின் நலனுக்காக, நாம் இழந்த உரிமையை மீண்டும் மீட்க இந்த அடிமை அரசை 2021இல் மக்கள் தோற்கடிக்க வேண்டும். 

நன்றி. !
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஏன் அதிமுக அரசை மக்கள் 2021ல் தோற்கடிக்க வேண்டும்? - 1 Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran