எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, உனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால், ரஜினி என்று சொல்லுவேன். நான் எப்படிபட்ட ரஜினி ரசிகன் என்று என் நண்பர்களுக்கு தெரியும். தலைவர் அரசியல் கட்சி ஆரமிக்க போகுறேன் என்று கூறியவுடன் எனக்கு பிடிக்க வில்லை. காரணம்,
1. எல்லாரும் அவரை திட்டுவார்கள்.
2. அவர் உடல் நிலை இதுக்கு சரிவராது.
3. அவருக்கு தமிழ் நாடு பற்றி தெரியாது.
4. அவரை பயன்படுத்தி ஓரு கூட்டம் உள்ளே நுழைய நேரிடும்.
5. அவருக்கு அரசியல் தெரியாது.
சமீப காலமாக அவர் தீவிரமாக அரசியல் பேச தொடங்கியதில் இருந்து அவர் மீது வெறுப்பு தான் வந்தது. எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, இன்று அரசியல் தனக்கு வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கின்றார். ஒரு ரசிகனாக, தமிழ் நாட்டின் நலன் விரும்பியாக அளவற்ற மகிழ்ச்சி.
அரசியல் ப்ரோகர்கள் அவரிடம் இருந்து விலகி இருந்தாலே அவருக்கு எந்த நோயும் அண்டாது.
அவர் நல்ல மனதுக்கு அவர் இன்னும் பல ஆண்டுகள் எங்கள் சூப்பர் ஸ்டாராக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி தலைவா...!
0 comments:
Post a Comment