சிரஞ்சீவி!
ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, பரஜ்யா ராஜ்யம் என்ற கட்சியை 2008இல் திருப்பதியில் தொடங்கினார். கட்சி தொடங்கி ஒரு வருடத்திற்குள் நடந்த சட்ட மன்ற தேர்தலை எதிர் நோக்கினார். ஆந்திரா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். ஆனால் அவருக்கு கிடைத்த இடங்கள் வெறும் 18 தான்.
மூன்றே வருடத்தில்(2011), எதையும் தாக்கு பிடிக்க முடியாமல் கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்து கொண்டார். காங்கிரஸ் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கி அவரின் கட்சிக்கும் அவருக்கும் சுபம் போட்டு முடித்து விட்டது.
இதில் நாம் உற்று நோக்க வேண்டிய விடயங்கள்
1. சிரஞ்சீவி கட்சியை தொடங்கும் பொழுது அவருக்கு வயது 53. புகழின் உச்சத்தில் இருந்த நேரம்.
2. சிரஞ்சீவி பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஆந்திரா தான். அவரின் தாய் மொழியும் தெலுகு தான்.
3. புகழை மட்டும் வைத்து வெற்றி பெற முடியாது என்று, மக்களை சந்தித்து அவர் பிரச்சாரம் செய்தார். என்ன தான் புகழ் இருந்தாலும், அவருக்கு கிடைத்த இடங்கள் வெறும் 18 தான்.
குறிப்பு: NTR அவர்களுக்கு வாய்த்தது சிரஞ்சீவிக்கு வாய்க்கவில்லை. காரணம், மக்களிடம் இருக்கும் விழுப்புணர்வு மற்றும் கல்வி அறிவு தான்.
பிறந்து, வளர்ந்து, அதே தாய் மொழியை கொண்ட சிரஞ்சீவிக்கே அந்த நிலைமை என்றால்.....
மற்றதை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.
இதைபற்றி கொஞ்சம் தெளிவாக என்னுடைய Youtube channelஇல் பகிர்ந்துள்ளேன்…
https://m.youtube.com/watch?v=UttXgKuQm9M
நன்றி!
0 comments:
Post a Comment