praveenkumar558@gmail.com
Follow on
Wednesday, March 17, 2021

சசிகலா இல்லாத ஜெயலலிதா ?

கேள்வி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா நட்பு மட்டும் இல்லாதிருந்தால் மிக நல்ல முதல்வராக இருந்து இருப்பார் அல்லவா?

பதில்:

அரசியல் எனக்கு வேண்டாம் என்று ஓடி போன ஜெயலலிதாவை மீண்டும் தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்து பாதுகாத்தது சசிகலா குடும்பம் தான். சசிகலா குடும்பம் மட்டும் இல்லை என்றால் ஜெயலலிதா என்று ஒரு நபர் தமிழ் நாட்டு அரசியலில் இல்லாமல் போய் இருப்பார். பல்வேறு உயிர் அச்சுறுத்தல்கள் வந்த சமயத்தில் ஜெயலலிதாவிற்கு அரணாக இருந்தது சசிகலா குடும்பம் தான் என்று கூறினால் மிகையாகாது.


என்னமோ ஜெயலலிதா நல்லவர் சசிகலா தான் அவரை கெடுத்தார் என்று கூறுவது கேடித்தனம். தனக்கு செய்த உதவிக்காக சசிகலா குடும்பத்தை கொள்ளையடிக்க விட்டு வேடிக்கை பார்த்தது மட்டும் இல்லாமல் அதை சட்ட ரீதியாக அரங்கேற்றம் செய்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் தான் சசிகலா. நீங்கள் கூறுவது போல சசிகலா மட்டும் இல்லாமல் இருந்துதால் ஜெயலலிதாவால் ஒரு அடி கூட எடுத்துவைத்து இருக்க முடியாது.

ஒரு வேலை சசிகலா அவர்களை ஜெயலலிதா நிரந்தரமாக ஒதுக்கி வைத்து இருந்தால், சசிகலா இடத்திற்கு சோ ராமசாமி போல வேறு ஒருவர் வந்து இருப்பார். அவ்வளவு தான் வித்யாசம். சசிகலா இல்லாமல் இருந்து இருந்தால், ஜெயலலிதா நல்ல முதல்வராக இருந்து இருப்பார் என்று கூறுவது எல்லாம் நகைப்புக்குரியது.

நன்றி!
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சசிகலா இல்லாத ஜெயலலிதா ? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran