திருவான்மியூர் தொடங்கி VGP வரைக்கும் bachelor hub தான். வேலைக்கு செல்பவர்கள் மட்டும் கிடையாது, கல்லூரி மாணவர்களுக்கும் ECR ஒரு சொர்க்கம் என்று கூறலாம். வர நாட்களில் பல நேரங்களில் வெறிச்சோடி இருக்கும். வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். பலரும் பல்வேறு காரணத்திற்கு ECR இல் பயணம் செய்வார்கள்.
இன்னும் எனக்கு நன்கு நியாபகம் உள்ளது, புகைப்படம் எடுப்பதற்காகவே ஒரு சனிக்கிழமை காலை திருவான்மியூர் தொடங்கி மாகபலிபுரம் வரை நாங்கள் வண்டியில் சென்றோம். அப்படி சென்ற போது எடுத்த புகைப்படம் தான் இது.
குளிக்காமல் கொள்ளாமல் அதிகாலை எழுந்து அங்கு அங்கு நின்று புகைப்படம் எடுத்து மாகபலிபுரம் வரை என்று வீடு திரும்பினோம். அந்த காலை பொழுது புகைப்படம் எடுப்பதற்கு ஒரு சிறந்த நேரம். நேரம் ஆக ஆக வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பாதி பேர் அதிகாலை தான் பயணம் செய்வார்கள். எனவே நாங்களும் அதிகாலை சென்று திரும்பினோம்.
Bachelor hub என்பதினால் தான் என்னமோ, தெரு ஓரம் இருக்கும் கடைகள் ஏராளம். கிட்டத்திட்ட எல்லாக் கடைகளிலும் நான் உண்டு இருக்கின்றேன். ஒவ்வொரு கடையும் ஒவ்வொரு சுவை. தினம் தினம் காலையில் ஒரு சாலை ஓரம் இருக்கும் பாட்டியிடம் பூரி கிழங்கு காரச்சட்னி சாப்பிட்டு அலுவலகம் செல்வேன். இந்த பதிவை எழுதும் போது கூட, அந்த பாட்டி கண் முன்னாடி வந்து சென்றார்.
கடைக்கு வரும் எல்லாரும் அவர்கள் கண்ணுக்கு தெரியும் உறவு முறையில் அழைப்பார்கள். அவரும் அன்போடு ஏற்று கொள்வார். அம்மா அப்பா சொந்த ஊரு என்று பிரிந்து இருக்கும் bachelor களுக்கு அந்த பாட்டி போன்றவர்கள் தான் ஒரு ஆறுதல்.
0 comments:
Post a Comment