சிறு வயதில் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி உள்ளேன். வருடம் அதிகமாக அதிகமாக பிறந்த நாள் கொண்டாட்டம் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. பிறந்த நாள் என்பது மற்றொரு நாள் போல தான் என்று ஆகி விட்டது. மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் பிறந்த நாள் என்று கொண்டாடியது சென்னையில் தான். அதுவும் பிறந்த நாள் அன்று அல்ல, அதற்கு முன்னரே கொண்டாடினேன். அதுவும் நண்பர்கள் சூழல..
பிப்ரவரி மாதம் என் நண்பர்கள் இரண்டு பேருக்கும் பிறந்த நாள். மூன்று பேர் பிறந்த நாளை கொண்டாட குயின்ஸ் லாண்ட் செல்லாம் என்று முடிவு செய்தோம். யார் எல்லாம் வருகிறார்கள் என்று கேட்டு ஒரு சனிக்கிழமையை முடிவு செய்தோம்.
அந்த சனிக்கிழமை நானும் நண்பர்களும் குயின்ஸ் லாண்ட் நோக்கி புறப்பட்டோம். தாம்பரத்தில் இருந்த பேருந்து பிடித்து குயின்ஸ் லாண்ட் செல்ல முடிவு செய்தோம். வழக்கம் போல லேட்டாக தான் கிளம்பினோம். உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணம் செய்தோம். பஸ் போகுது போகுது.. போய்கிட்டே இருக்கு. குயின்ஸ் லாண்ட் போறோமா இல்லை ஆந்திரா செல்கிறோமா என்று நினைக்கும் அளவிற்கு போய்கிட்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், அந்த வழியாக தான் ஆந்திரா செல்ல வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமா இருந்தது,இறுதி வரை உட்கார இடமே கிடைவில்லை.
ஒரு வழியாக சுமார் 12 மணிக்கு குயின்ஸ் லாண்ட் போய் சேர்ந்தோம். வார இறுதி நாள் என்பதினால், கூட்டம் அதிகமாக இருந்தது. எதில் எல்லாம் கூட்டம் இல்லையோ அதில் ஏறினோம். கூட்டம் இருப்பதில் லைனில் நின்று ஏறினோம். அளவற்ற புகைப்படம் எடுத்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிறைவான நாளாக இருந்தது. அந்த நாள் பற்றி ஒரே ஒரு புகைப்படத்தில் கூற வேண்டும் என்றால், அது இந்த படம் தான்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியத்தில் அளவற்ற மகிழ்ச்சி.சென்னை நினைவுகளில் இது என் மனதில் எப்போதும் இருக்கும்.
0 comments:
Post a Comment