air 'India' sold
இந்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமத்திடம் விற்ற செய்தி அதிகார பூர்வமாக வந்துவிட்டது. அது பற்றி என் பார்வை
1. நான் படித்த பள்ளி அருகில் ஒரு கிராமம் ஒன்று உள்ளது. அதன் பெயர் கீழக்குயில்குடி. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அங்கு தினம் பேருந்து செல்லும். அங்கு ஒன்று இரண்டு நபர்கள் தான் ஏறுவார்கள், ஆனாலும் அங்கு தினம் அரசு பேருந்து செல்லும். ஒரு வேலை, முழுமையான தனியார் மயம் ஆகி இருந்தால், லாபம் குறைவு என்று பேருந்து சேவையை நிறுத்தி இருப்பார்கள். Availability for all will be in stack.
2. சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டும் என்றால் அரசு பேருந்தில் 500 ரூபாய் ஆகும். தனியார் பேருந்தின் ஆரம்ப விலை 800 ரூபாய். ரயிலில் 200 ரூபாய்க்கு கூட செல்லலாம். ஒரு வேலை, முழுமையான தனியார் மயம் ஆகி இருந்தால், ஒரு சிலர் மட்டுமே பயணம் செய்வார்கள். Affordability for all will be in stack..
3.கோரோணா பெருந்தோற்று காலத்தில், இந்தியாவில் உள்ள எல்லா விமான சேவைகளுக்கும் சீனா சேவையை நிறுத்தியது. அரசின் air india மட்டும் தான் சீனா வில் இருந்த இந்தியர்களை மீண்டும் தாயகம் திரும்ப உதவி செய்தது. ஒரு வேலை அரசுக்கு சொந்தமாக விமனா சேவை இல்லை என்றால்...ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
4. அரசு பள்ளிகள் சரி இல்லை. எல்லா அரசு பள்ளிகளையும் மூடி தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறி வந்தார்கள். கோரோணா காலத்தில் பலரின் பொருளாதாரம் மோசமான காரணத்தால், அரசு பள்ளிகளில் சேறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானது. ஒரு வேலை, எல்லா பள்ளிகளும் தனியாரிடம் இருந்து இருந்தால்?
தனியாரின் பங்களிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம் தான் இருக்க வேண்டும். முழுமையான தனியார் பங்களிப்பு பெரும் ஆபத்து.
Air india மீண்டும் டாடா வசம் சென்றதை பலரும் வரவேற்று உள்ளனர். போக போக தெரியும் இதன் விளைவு. Air india பெரும் சுமை. அதை அரசு விற்றுவிட்டது என்று பெருமையாக பானு கோமேஸ் எழுதியுள்ளார். இந்தியாவே பெரும் சுமை என்று மோடி அரசு மீண்டும் இந்தியாவை வெள்ளையர்களுக்கு விற்றாலும் நான் ஆச்சரியம் அடைய மாட்டேன்.
If not Modi ji, then who will sell India?
0 comments:
Post a Comment