அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் வியந்து பார்க்கும் ஒரு கலைஞர் என்றால் அது கலை தாய் பெற்று எடுத்த மூத்த மகன் கமல் அவர்கள் தான். நான் வாழ்ந்த காலத்தில் ஒரு சகல கலா வல்லவன் என்றால் அது கமல் தான். வேட்டையாடு விளையாடு படத்திற்கு திரையரங்கில் கத்தியது எல்லாம் இன்னும் எனக்கு நியாபகம் உள்ளது.
சென்னை வந்த புதிதில் எல்லாரும் போல எனக்கும் நடிகர்களை பார்க்க வேண்டும். அவர்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று எல்லாம் ஆசை இருந்தது. நான் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் அருகில் இருந்தாலும், கமல் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. கோடம்பாக்கம் விட்டு வந்த பிறகு, அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாமல் இருந்தேன்.
திடீர் என்று ஒரு நாள், என் எல்லா வெளியூர் பயணத்தையும் அழகாக திட்டமிட்டு கொடுத்த Travels2020 நிறுவனர் நண்பர் முகேஷ் அவர்கள் எனக்கு கமல் அவர்களை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். மறுநாள் காலையில் என்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அவர்களின் இல்லத்திற்கு வர கூறி இருந்தார். அது அலுவலக தினம். யாருக்கும் தெரியாமல் சொல்லாமல் கொள்ளாமல் ஆழ்வார்பேட்டை நோக்கி பயணம் செய்தேன்.
நான் திரையில் பார்த்து வியந்த ஒரு கலைஞனை நேரில் பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சி அளவற்று இருந்தது. வேக வேகமாக ஆழ்வார்பேட்டை சென்று அடைந்தேன். எல்லாருடன் சேர்ந்து நானும் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தேன். கமல் வருகைக்கு எல்லாரும் காத்து கொண்டு இருந்தார்கள். திடீர் என்று எல்லாரும் எந்திரிக்க தொடங்கினார்கள். கமல் மெல்ல முகத்தில் புன்னகையுடன் நடந்தது வந்து மேடையில் ஏறினார். நடப்பது எல்லாம் உண்மையா என்று என்னை நானே கேட்டு கொண்டேன். திரையில் கண்டு நான் வியந்த கலைஞன் என் கண் முன்னால். என்ன பேசுகின்றார் என்பதை எல்லாம் என் காதுகளில் கேட்கவில்லை. அந்த அளவுக்கு ஒரு அதிர்ச்சியில் இருந்தேன்.
வரிசை வரிசையாக புகைப்படம் எடுக்க கூப்பிட்டார்கள். நான் 4 வது வரிசையில் இருந்தேன். என் வாய்ப்பு வந்தது. மெல்ல கமல் அவர்களை நோக்கி நடந்து சென்றேன். கமல் அவர்களுக்கு என் கைகளை கொடுத்தேன். அவரும் அவர் கைகளை கொடுத்தார். எல்லாம் ஒரு மேஜிக் போல இருந்தது. அவர் அருகில் நிற்க முடியவில்லை. கொஞ்சம் தள்ளி நின்று எடுத்து கொண்ட புகைப்படம் தான் இது.
என் வாய்ப்பு முடிந்த பிறகு கொஞ்ச நேரம் அங்கே இருந்தேன். எல்லாருடனும் புகைப்படம் எடுத்துவிட்டு மீண்டும் அவர் அலுவலகம் சென்று விட்டார் கமல். மேஜிக்யில் மிதந்து கொண்டே மீண்டும் அலுவலகம் சென்று அடைந்தேன்... இரவு நேரம் இந்த புகைப்படம் வந்து சேர்ந்தது.
கமல் அவர்களை சந்தித்த அந்த நாளை நான் என்றும் மறக்க மாட்டேன். அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நண்பர் முகேஷ் அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறி கொண்டே இருப்பேன்...
நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்தால், நண்பர் முகேஷ் அவர்களை இந்த இணையத்தளத்தில் தொர்பு கொள்ளலாம்.
https://www.travels2020.com/
உங்கள் பயணம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு நான் உத்திரவாதம்.
நன்றி!
0 comments:
Post a Comment