கேள்வி: தருமபுரி நாம் தமிழர் கட்சி கூட்ட மேடையில் ஏறி மைக்கை பிடுங்கி கூட்டத்தை நிறுத்திய தி.மு.க-வினர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:
"மருத்துவ அடி,மிதி"
ஒரு ஊரில் அப்பா அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு பையன் இருந்தான். அப்பா அம்மா பேச்சை கேட்காத அப்பா அம்மா விடம் அடங்காமல் வளர்ந்து வந்தான். அவன் அப்பா அம்மா வும் சளைத்தவர்கள் அல்ல. அவனை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்து உள்ளார்கள். தவறு செய்யும் நேரத்தில் ரெண்டு மிதி மிதிக்காமல் விட்டத்தின் விளைவு தான் பையன் அடங்க மாட்டாமல் இருக்கின்றான். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் எல்லாம் பல்லை பிடுங்கிய பாம்பு என்பதால், அங்கையும் இதே நிலமை தான்.
ஒரு வழியாக படித்து முடித்து விட்டு வாழ்க்கையை வாழ தொண்டங்கினான். எந்த ஒரு கண்டிப்பும் இல்லாமல் வளர்ந்ததால், சமுதாயம் அவனிடம் கண்டிப்புடன் இருக்க தொடங்கியது. அப்பா அம்மா ஆசிரியர்கள் அவனை கண்டிக்காமல் விட்டதின் விளைவு தான், இன்று சமூகம் ரெண்டு மிதிக்கின்றது.
இவைகளை நாம் மருத்துவ அடி என்று கூறலாம். வீடுகளில் இருக்கும் அப்பா அம்மா போல, வெளியில் இருப்பவர்களும் கடந்து செல்வார்கள் என்று நினைப்பது தவறு. வீட்டுக்கு அடங்காத பிள்ளை, சமூகத்தில் அடி வாங்கியாவது திருந்துவதில் எந்த ஒரு தவறு இல்லை.இந்த சமூகமும் அவனை அடிக்கவில்லை என்றால், மிக பெரிய சமூக விரோதி ஆகி விடுவான். சமூகத்தின் அமைதியை குழைத்து விடுவான். வீட்டில் இருப்பவர்கள் என்ன பேசினாலும் பொறுத்து கொள்வார்கள், வெளியில் இருப்பவர்கள் அதே போல இருப்பார்கள் என்று எதிர் பார்க்க கூடாது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பிள்ளைகளை வீட்டில் ரெண்டு மிதி மிதித்து ஒழுங்காக வளர்க்கவும். இல்லை என்றால், அதை மற்றொருவர்கள் செய்வார்கள்.
குறிப்பு: நம் பிள்ளைகளை நாம் அடித்து வளர்ப்பது எந்த ஒரு தவறு இல்லை. கண்டவன் பேச்சை கேட்டு கண்டவன் கிட்ட அடி வாங்குவதற்கு இது மேல்.
நன்றி!
0 comments:
Post a Comment