சொல்லி தீர்த்து விட்டேன்
சொல்ல வார்த்தைகள் இல்லை
என்னை ஏற்பதும்
ஏற்காமல் இருப்பதும்
உன் விருப்பம் தான்
ஆனாலும் ஏற்று கொள்வாய் என்று
தினம் தினம் வேண்டி கொண்டு இருக்கின்றான்
ஒரு நாத்திகன்.
கடவுளும் கன்னியும் ஒன்று தான்,
புரிந்தாலும் புரியாத மாதிரி மௌனம் கார்ப்பார்கள்.
கன்னி மௌனம் கலையட்டும்
கடவுள் மௌனம் கலையாது என்று உறுதிப்படுத்த.
பலர் வேண்டாத தெய்வம் இல்லை என்பார்கள்,
நான் வேண்டிய தெய்வம் இல்லை என்று இருந்தவன்
என்னையும் வேண்ட வைத்து விட்டால்
நாத்திகன் நிலையை மாற்றிவிட்டால்
சொல்லி மூன்று நாட்கள் ஆகிவிட்டது
ஏதோ முன்னூறு ஆண்டுகள் போல ஒரு அயர்ப்பு
இன்னும் மூன்று ஆண்டு ஆனாலும் பரவயில்லை,
மௌனம் மட்டும் வேண்டாம்
மௌனத்தை புரிந்தது கொள்ளும் அளவிற்கு
புத்திசாலி இல்லை நான்
அதனால் தான் காதல் கிருக்கனாக இருக்கின்றேன்.
தோழியாக சந்தித்த ஏறி கரை ஏங்குகிறது
அவள் எங்கே என்று
தோழியா இல்லை காதலியா என்ற நிலை புரியாமல் இருக்கும்
என்னை பார்த்து சிரிக்கிறது,
அலை அலையாக
அடிக்கடி செல்லும் படகு தனியாக நிற்கிறது
உன்னை சுமக்க வேண்டும் என்று ஏங்குகிறது
என்னை போலவே
நாத்திகன் விரதம் கலைந்து 4 நாட்கள் ஆகிவிட்டது
உன் பதிலுக்காக கடவுளும் காத்து கொண்டு இருக்கின்றது
புதிய வாடிக்கையாளரை தக்கவைக்க
வேடிக்கை நாத்திகன்
இரவு ஒரு மணிக்கு எழுந்து சிரிக்கின்றேன்
உன்னிடம் நான் காதலை கூறிய தருணத்தை நினைத்து
வெயில் சுட்டது
தோழமை பொசுங்கி காதல் பூ மலர்ந்தது.
உன்னை நான் என்று மட்டும் தான் கூறினேன்
வேண்டாம் என்றாய்
புரிந்து கொண்டு வேண்டாம் என்றாயா புரியாமல் வேண்டாம் என்றாயா?
Sudoko கூட இவ்வளவு குழப்பியது இல்லை..
0 comments:
Post a Comment