அது ஒரு மட்டமான குடும்பம் என்று கூறும் போது, அந்த குடும்பத்தில் இருக்கும் சூடு சொரணை உள்ளவர்கள் எதிர்வினை ஆற்றுவார்கள். கோபம் வரும். அது எல்லாம் இல்லாதவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள். அவர்களிடம் சூடு சொரணை மானம் ரோஷம் எல்லாம் எதிர் பார்க்க கூடாது. இப்ப எதுக்கு இதை சொல்கிறேன் என்றால்,
திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை கெடுத்துவிட்டது, திராவிடம் என்பது பொய் என்று h ராஜா போன்றவர்கள் திட்டும் போது சூடு சொரணை உள்ள திராவிட கட்சிகள் எதிர்வினை ஆற்றுவார்கள். அதிமுக அமைதியாக இருக்கும். எந்த பதிலும் சொல்லாது..
இப்ப கூட பாருங்க, ஆளுநர் ரவி கூட்டாட்சி தத்துவம் பற்றி பிதற்றி உள்ளார். திமுக மதிமுக எதிர்வினை ஆற்றுகிறார்கள். அதிமுக அமைதியா இருக்கு. காரணம், அவர்களுக்கு தெரிந்த திராவிடம் கூட்டாட்சி எல்லாம்
"தங்க தாரகை புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா"
கொஞ்ச நாளைக்கு அம்மா, அப்பறம் சின்ன அம்மா, இப்ப அமித் ஷா ஜி. நாளைக்கு அமித்ஷா ஜி மகன். இவ்வளவு தான் இவனுங்க.
தெளிவான கொள்கை கொண்ட பாஜக கூட தமிழ் நாட்டில் இருக்கலாம், எதுக்கு இருக்கோம் என்று தெரியாமல் இருக்கும் இந்த அடிமைகள் தான் தமிழ் நாட்டின் உண்மையான ஆபத்து.
- பிரவீன் குமார் ராஜேந்திரன்
0 comments:
Post a Comment